வேதாளம் வெற்றிக்காக ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்ட அஜீத்!
தனது ஒவ்வொரு புதுப் படம் வெளியாகும்போதும் திருப்பதி ஏழுமலையானை நேரில் தரிசிப்பது அஜீத்தின் வழக்கம்.
அந்த வகையில், தீபாவளிக்கு வெளியாகும் தனது வேதாளம் படத்தின் வெற்றிக்காக நேற்று இரவு திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டார்.

நேற்று இரவு அஜீத் திருமலை வந்தார். இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். அஜித்தை கண்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். ரசிகர்கள் பலர் அஜித்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
கோயிலை நடந்து வலம் வந்தார். எதிர்ப்பட்ட அனைவருக்கும் வணக்கமும் தீபாவளி வாழ்த்துகளும் கூறிவிட்டு கிளம்பினார்.
அவரிடம் நிருபர்கள் பேட்டி கேட்டு நின்றபோது, "எனது ரசிகர்கள் அனைவரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்," என்றார்.
Comments


Click it and Unblock the Notifications