இனி தமிழ் படங்கள்தான்... வேறு மொழிப் படங்கள் வேணாம்! - அஜ்மல் அமீர்
திரு திரு துரு துரு, அஞ்சாதே, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் நடித்து வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதற்குள் தெலுங்கு, மலையாளம் என்று போய்விட்டார்.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்தவருக்கு அங்கேயும் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது.

திரும்பவும் மலையாள படவுலகிற்கு போனவருக்கு மோகன் லாலுடன் சேர்ந்து ஒரு படத்தில் தமிழ்ப் பையனாக நடிக்க வாய்ப்பு வந்து, அங்கும் தெரிந்த முகமாகிவிட்டார்.
இப்படி முன்று மொழிகளிலும் நடித்தாலும், தமிழ் படங்களில் நடிக்கவே அதிகம் ஆசைப்படுகிறாராம் அஜ்மல். இதற்காகவே மலையாளம், தெலுங்குப் படங்களுக்கு கொஞ்ச நாள் ஓய்வு கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்தப் போகிறாராம் . அதற்காகவே கேரளாவிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்து வந்து விட்டாராம். தனது அடுத்த சுற்றுக்கு நல்ல கதைகளாகக் கேட்டு வருகிறார்.

இனி தமிழில் ஒரு நல்ல இடத்தை பெரும் வரை தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறேன் என்றவர், தன்னைத் தேடி வந்த ஒரு இந்திப் பட வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்!


Click it and Unblock the Notifications











