Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளியே போ: செல்ஃபி எடுத்த மாடல்களை திட்டி விரட்டிய இளம் ஹீரோ
ஹைதராபாத்: படப்பிடிப்பு தளத்தில் சில மாடல்கள் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் கோபம் அடைந்து அவர்களை திட்டி விரட்டிவிட்டாராம்.
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் தெலுங்கு படம் துவ்வடோ ஜகன்னாதம். அந்த படத்தில் வரும் திருமண நிகழ்ச்சி காட்சியை படமாக்கியுள்ளனர்.
அந்த காட்சியில் பல மாடல்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. திருமண நிகழ்ச்சிக்காக அங்கு பிரமாண்ட செட் போட்டிருந்தனர்.
இந்நிலையில் மாடல்கள் செட்டில் நின்று ஆளாளுக்கு செல்ஃபி எடுத்தனர். செட் டிசைன் கசிந்துவிடும் என்று நினைத்த அல்லு அர்ஜுன் கோபம் அடைந்து மாடல்களை திட்டி செட்டில் இருந்து வெளியே விரட்டியுள்ளார்.
அதன் பிறகு கோபத்தை அடக்கிக் கொண்டு செட்டிற்கு உள்ளே செல்ஃபி எடுக்காதீர்கள் தயவு செய்து வெளியே சென்று எடுங்கள் என்று அமைதியாக கூறியுள்ளார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.