Don't Miss!
- News ரூ 20 லட்சம் கோடி லஞ்ச பணத்தை பறிமுதல் செய்வேன்.. மத்திய சென்னை சுயேச்சை முன்னாள் நீதிபதி கர்ணன்
- Lifestyle ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
- Finance பெங்களூரை நேரம் பார்த்து அடிக்கும் கேரளா.. ஐடி நிறுவனங்களுக்கு வலைவீச்சு..!!
- Automobiles மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
- Technology நொடிக்கு நொடி ஆர்டர்.. ரூ.7998 பட்ஜெட்ல iPhone லெவல்.. AI கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
வறட்சி... தண்ணீரில்லாத ஹோலி கொண்டாடுங்கள்: அமிதாப் வேண்டுகோள்
மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வண்ணப் பொடிகளை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படவுள்ளது..
இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்து விட்டதால், அனாவசியமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், ஹோலி கொண்டாடும்படி இந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப்பச்சன் வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோன்று அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தண்ணீர் சிக்கனத்தைப்பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். மாணவர்களும் வீதி நாடகங்கள் மூலமும் வீடு, வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதன் மூலமும் மக்களுக்குத் தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர அரசும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தண்ணீரைச் செலவழிக்க வேண்டாமென்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாக்பூரில், தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ஆசிரமம் பாபு இடத்தில் ஹோலியின்போது 50,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் செலவு செய்யப்படுவது விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அத்தகைய கொண்டாட்டத்தை அரசு தடை விதித்துள்ளது.