Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய்க்கு அன்புமணி பாராட்டு
ரஜினியைப் போலவே விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சில தினங்ளுக்கு முன்பு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்று உறுதியளித்தார்.
இதை வரவேற்றுள்ள அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்திலும் விஜய் தீவிரமாக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்புமணி, விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புத் தம்பி விஜய்க்கு வணக்கம். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் புகை பிடிப்பது போல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்த செய்தியினை செய்தித்தாள் வழியாக அறிந்தேன்.
இதற்காக தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தினாலும், புகையிலையை உபயோகிப்பதாலும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
மேலும் இருதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் நோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பெண் சிசுக் கலைப்பு ாகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது அமைச்சகம் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தாங்களும் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார் அன்புமணி.