Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சக்ரவியூஹா மூலம் கன்னட சினிமாவுக்கு வரும் அருண் விஜய்!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற அருண் விஜய், அடுத்து கன்னடத்தில் 'சக்ரவ்யுஹா' திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
இந்தப் படம் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'இவன் வேற மாதிரி' படத்தின் கன்னடப் பதிப்பு. 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில், புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் அருண் விஜய்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அருண் விஜய் கூறுகையில், "கன்னட சினிமா மீது எனக்கொரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. எனக்கு சில வாய்புகள் நடிக்க வந்திருந்தாலும், சரியான கதாப்பாத்திரத்திற்காக நான் காத்து கொண்டிருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த திரைப்படம் தான் 'சக்ரவ்யுஹா," என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இயக்குனர் சரவணன் படத்தில் நடிப்பது, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதற்கு சமம். அந்த அளவிற்கு அவரின் கதையும், வேடங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அதே போல் புனித் சாருடன் இணைந்து நடிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நாங்கள் இருவருமே சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் எங்கள் இருவரிடையே நல்ல நட்பும், மரியாதையும் உண்டு.
பொதுவாக சண்டை காட்சிகளை அவ்வளவு எளிதில் பதிவு செய்ய முடியாது. ஆனால் எங்களுக்குள் இருந்த புரிதலும், ஒருங்கிணைப்பும் படத்தின் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்க உதவியது. ஹீரோ - வில்லன், இருவரின் கதாப்பாத்திரங்களும் சமமாக அமைந்திருப்பது படத்தின் மிக பெரிய பிளஸ்! அது மட்டுமில்லாது, கன்னட சினிமா தங்களின் தரமான படைப்புகளால் சக மொழி திரைப்படங்களோடு போட்டியிட்டு கொண்டிருக்கும் காலமிது. இதற்கு சான்றாக விரைவில் வெளியாகும் 'சக்ரவ்யுஹா' திரைப்படம் அமையும்," என்றார்.