twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா

    By Siva
    |

    சென்னை: ஆர்யா ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்தவர்கள் பயந்துவிட்டனர்.

    எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடிந்து நிம்மதியாக உள்ளார் ஆர்யா. அந்த நிகழ்ச்சி என்னவோ முடிந்துவிட்டது ஆனால் ஆர்யாவையும், அந்த 3 பெண்களையும் பற்றிய பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடு இல்லை.

    இந்நிலையில் ஆர்யா ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.

    ஆர்யா

    ஆர்யா

    ஆர்யாவுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சைக்கிளில் எங்காவது கிளம்பிவிடுவார். இந்நிலையில் அவர் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளார்.

    அதிர்ச்சி

    ஆர்யா 200 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றபோது சாலையோரம் சைக்கிள் ஒரு புறமாகவும் அவர் ஒரு புறமாகவும் கிடந்த புகைப்படத்தை பார்த்தவுடன் பலருக்கும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. அதன் பிறகே அவர் சும்மா தான் அப்படி படுத்துக் கிடந்துள்ளார் என்பது தெரிந்தது.

    பாராட்டு

    9.38 மணிநேரத்தில் 200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அதை செய்துள்ள ஆர்யாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

    ஆசை

    ஆசை

    ஆர்யா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளில் செல்வது உள்ளிட்ட புகைப்படங்களை பார்க்கும் இளம் தலைமுறையினர் தாங்களும் இவ்வாறு செய்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் செயலிலும் இறங்குகிறார்கள்.

    இனி மேல்

    இப்படி சாலையோரம் மட்ட மல்லாக்க படுத்துக் கிடக்கும் புகைப்படத்தை எல்லாம் இனி ட்விட்டரில் வெளியிட்டு பீதியை கிளப்பாதீர்கள் ஆர்யா.

    English summary
    Actor Arya has covered 200 km in just 9.38 hours in cycle. He has posted few pictures of him when he went for cycling with his friends.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X