Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சந்திப்போமா?
நடித்தால் கதாநாயகியாகத் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார் நடிகை பாரதி.
வயசுப்பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பாரதி. குறிஞ்சி மலராய் தமிழ் சினிமாவில் இருக்கும் தமிழ்ப் பெண்களில் இவரும் ஒருவர்.
கோவையிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களை ரட்சிப்பதற்காக சென்னை வந்தவர். வயசுப் பசங்க படம் சரியாகப் போகததால் அம்மணிக்குவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிக்கத் தயார் என்று பேட்டி கொடுத்து இரண்டு படங்களில்கவர்ச்சியாகவும், அதற்கடுத்து சில படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸூம் பின்பு அக்கா, அண்ணி என்று எப்படியோ சினிமாவில்தலைகாட்டிக் கொண்டே இருந்தால் போதும் என்று இருப்பார்கள்.
ஆனால் பாரதி கொஞ்சம் வித்தியாசம். வீட்டில் சும்மாயிருந்தாலும் பரவாயில்லை; சில்லறை வேடங்களில் நடிக்க மாட்டேன்; நடித்தால்நாயகிதான் என்று ஒத்தைக்காலில் நிற்கிறார்.
ஏன் இப்படி என்று கேட்டபோது,
வயசுப்பசங்க படம் சரியாகப் போகவில்லை. அதற்கடுத்து எனக்குப் பிடிச்ச மாதிரி தயாரிப்பு கம்பெனியோ, இயக்குநரோ அமையவில்லை(இதெல்லாம் ரொம்ப ஓவர் டாக்).
அதே நேரத்தில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். சும்மா ஒப்புக்கு வந்து ஆடிவிட்டு போவதில் எனக்குவிருப்பமில்லை.
பேசாமல் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ப்ளஸ் ஒன் (நல்லவேளை எல்.கே.ஜின்னு சொல்லவில்லை) படிப்பை தொடரலாம் எனநினைத்திருந்தபோதுதான் ஒளிப்பதிவாளர் இளவரசன் மூலம் கலக்கல் பட வாய்ப்பு வந்தது.
அதற்கடுத்து காதல் முடிச்சு உட்பட சில படங்களும் வந்தன.
சினிமா ரொம்ப ஈஸி என்று நினைத்து வந்தேன். வந்த பிறகுதான் தெரியுது இதிலுள்ள கஷ்டம். ரொம்பவும் கஷ்டப்பட்டால்தான் இங்கேஜெயிக்க முடியும். நான் தமிழ் பொண்ணா இருப்பதால் கதையை உள்வாங்கி நடிக்க முடிகிறது.
ஆனால் கவர்ச்சி காட்ட இந்த பொண்ணு சரிவராது என்ற காரணத்திற்காக பட வாய்ப்புகள் வராம போய்விடுகிறது என்று வருத்தமாககூறுகிறார்.
இதற்காகத் தான் தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வருகிறாராம்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை