Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆலியாவை முத்தமிடுவது போர்: சொல்கிறார் காதலர் சித்தார்த்
மும்பை: ஆலியா பட்டை முத்தமிடுவது போர் என்றும், தீபிகாவை முத்தமிடுவது நன்றாக இருக்கும் என்றும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர், நடிகைகளில் சிலர் தங்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்கள், தாங்கள் செய்த தவறுகள், ரகசியங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். கள்ளத் தொடர்பு வைத்தது பற்றி கோவிந்தாவும், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து நடிகை சித்ரங்கதா சிங்கும் வெளிப்படையாக பேசியுள்ளனர்.
நடிகை கல்கி, இயக்குநர் அனுராக் கஷ்யப்பும் தங்கள் வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வுகளை தெரிவித்துள்ளனர்.
ஆலியா பட்
நடிகை ஆலியா பட்டுக்கு இருட்டு என்றால் பயம். அதனால் அவர் தூங்கும்போது கூட லைட்டை ஆஃப் செய்யாமல் தான் தூங்குவார். மேலும் ஆலியாவுக்கு விமானத்தில் செல்வதும் பயம் தான்.
சல்மான் கான்
நடிகர் சல்மான் கான் வாழ்வில் எத்தனை காதலிகள் வந்து சென்றனர் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம். இந்நிலையில் அவரோ தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாகவும், வருங்கால மனைவிக்காக அதை பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சித்தார்த்
நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இந்நிலையில் ஆலியா பற்றி சித்தார்த் கூறுகையில், ஆலியாவை முத்தமிடுவது போர் அடிக்கும். ஆனால் தீபிகாவை முத்தமிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.
சோனம் கபூர்
சோனம் கபூர் பேவகூஃபியான் படத்தில் பிகினி அணிந்து நடித்தார். இந்நிலையில் அவர் பிகினி பற்றி கூறுகையில், எனது கைகளும், பின்னழகும் மிகவும் பெரியது. அதனால் என்னால் பிகினி அணிய முடியாது என்றார்.
சித்ரங்கதா சிங்
நான் பாலியல் தொல்லைகளை சந்தித்தவள் என்று பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங் தெரிவித்துள்ளார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
கோவிந்தா
நான் திருமணமான பிறகு கள்ளத் தொடர்பு வைத்திருந்தேன். வாழ்க்கையில் சிலவற்றை பற்றி வெளிப்படையாக பேசக் கூடாது. அது ரகசியமாக இருப்பதே நல்லது என்று நடிகர் கோவிந்தா கூறியுள்ளார்.
கல்கி கொச்லின்
நடிகை கல்கி கொச்லினும், அவரது முன்னாள் கணவர் இயக்குனர் அனுராக் கஷ்யப்பும் குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
ரித்திக் ரோஷன்
40 வயதானாலும் இன்னும் பல இளம் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் ரித்திக் ரோஷனின் குழந்தைப் பருவம் எளிதானதாக இல்லை. அவருக்கு திக்குவாயாக இருந்ததால் குழந்தைப் பருவம் மிகவும் கடினமாக இருந்ததாக ரித்திக் தெரிவித்துள்ளார்.