Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மஞ்சுவிரட்டில் ரகளை-நடிகர் ரித்தீஷ் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நேற்று முன் தினம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நடிகரும், தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ரித்தீஷ் குமாரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்த ரித்தீஷ் குமார், தனது நண்பர்களோடு போலீஸார் போட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி அத்துமீறி வந்ததாகவும், விசிலடித்து பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தியதாகவும், கிராம நிர்வாக அதிகாரி போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ரித்தீஷ்குமார், அவரது நண்பர்கள் சண்முகநாதன், செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது கலகம் ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.