Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் மீது சரண் ரூ. 2 கோடி புகார்
நடிகர் கமல்ஹாசன் நடிக்க, சரண் இயக்கிய வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைய தீர்மானித்தனர்.
இந்தப் படத்தை சரண் தயாரித்து, இயக்குவது எனவும், கமல் நாயகனாக நடிப்பது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென கமல்ஹாசனுக்குக் கூட தெரியாமல், தயாரிப்புப் பணியிலிருந்து சரண் விலகினார். அவருக்குப் பதில் அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் தயாரிப்புப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கமல்ஹாசன், இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்து விடுவதாகவும் சரணிடம் தெரிவித்து விட்டார்.
இதை எதிர்பார்க்காத சரண், கமல்ஹாசனை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இருப்பினும் கமல்ஹாசன் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் சரண் புகார் கொடுத்துள்ளார். அதில், கமல்ஹாசன் எனது படத்தில் நடிப்பதற்காக ரூ. 2 கோடி அட்வான்ஸ வாங்கியிருந்தார். அதை அவர் திருப்பித் தரவில்லை. அதை அவர் திருப்பித் தர வேண்டும் அல்லது எனது படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்தப் புகார் குறித்து உறுதிப்படுத்திய தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம.நாராயணன், கமல்ஹாசன் மிகப் பெரிய நடிகர். அவர் மீதான புகாரில் உண்மை உள்ளதா என்பதை முதலில் ஆராய்வோம். அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என்றார்.
சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது.