Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காதல் கொலைகளுக்கு சினிமா காரணமாக இருக்க முடியாது... அடித்துச் சொல்கிறார் விஜய் சேதுபதி
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் காதல் கொலைகளுக்கு சினிமா காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழகத்தில் சமீபகாலமாக ஒருதலைக் காதல் கொலைகள் அதிகரித்துள்ளன. இந்தக் கொலைகளுக்கு முக்கிய காரணம் சினிமா தான் எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சினிமாவைப் பார்த்து தங்களையும் நாயகனாக கருதிக் கொள்ளும் சிலர், எப்படியும் அழகான பெண்களை காதலில் விழ முயற்சிப்பதும், பின் அது இயலாத போது கொலை செய்வதும் அதிகரித்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால், இது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. 'ரசிகர்கள் மனதில் புதிதாக எதையும் திணிக்க முடியாது. காட்சிகள் பிடித்து இருந்தால் கைதட்டி ரசிப்பார்கள். அதை வாழ்க்கைக்கு கொண்டு வர மாட்டார்கள்' என்பது அவரது வாதம்.
மேலும் இது தொடர்பாக தனது றெக்க படவிழாவில் விஜய் சேதுபதி கூறுகையில், "நான் கதைகளையும் கதாபாத்திரங்களையும் கவனமாக தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிக்கவும் அக்கறை எடுக்கிறேன். 'றெக்க' கதை மிகவும் பிடித்தது. இதில் அதிரடி நாயகனாக இன்னொரு பரிணாமத்தில் என்னை பார்க்கலாம். திரைக்கதை ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். முந்தைய படங்களின் சாயல் இருக்காது.
சமூகத்தில் தற்போது நடந்து வரும் காதல் கொலைகளுக்கு சினிமா காரணம் என்று சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். ரசிகர்கள் மனதில் புதிதாக எதையும் திணிக்க முடியாது. காட்சிகள் பிடித்து இருந்தால் கைதட்டி ரசிப்பார்கள். அதை வாழ்க்கைக்கு கொண்டு வர மாட்டார்கள்.
காதல் கொலைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள் மனதில் ஏற்கனவே அதுபோன்ற உணர்வுகள் பதிந்து இருக்கிறது. அந்த தாக்கத்தில்தான் தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.