Don't Miss!
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புகைப் பழக்கத்தை அடியோடு விட்டொழியுங்கள்! - சூப்பர் ஸ்டார் ரஜினி
சென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் ரஜினி பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "ரசிகர்களைப் பார்க்க எனக்கு கூச்சமா, வெட்கமா இருக்குன்னு ஒரு விழாவில் சொன்னேன். ஏன்னா உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.
டாக்டர்கள் சொல்லியிருக்காங்க, எனக்கு பிபி ஜாஸ்தியா இருக்கு, என்ன விஷயமாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டு போகக்கூடாதுன்னு.
நான் மெட்ராசுக்கு வந்த பிறகுதான் நியூஸ்பேப்பர்ஸ், மேகஸின்ஸ் எல்லாமே நான் பார்த்தேன். என் ரசிகர்கள் எனக்காக நடத்திய பிரேயர்ஸ்... நான் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை பண்றது, நடந்து போறது, ஆயிரம் பேர் மொட்டை போட்டுக்கிட்டது, மண்சோறு சாப்பிட்டது, விரதமிருக்கிறது, கோயில்ல, சர்ச்ல, மசூதில பிரார்த்தனை செய்ததையும் படிச்சி தெரிந்துகொண்டேன்.
ஒருத்தர் சொன்னாங்க, மலைமேல உள்ள கோயிலுக்கு முட்டி போட்டுக்கிட்டே படியேறி பிரார்த்தனை செய்தேன். அதனால இரண்டு மாசம் ஆஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்காக எங்க அப்பா அம்மா கூட ஏண்டா இப்டி செஞ்சேன்னு கேக்கலன்னு சொன்னாரு.
இதை அவர் என்கிட்டே சொன்னபோது, அவருக்கு நான் நன்றின்னு சொன்னா.. அது எவ்ளோ சின்ன வார்த்தை... அவருக்கு நான் பணம் கொடுக்க முடியுமா... ஏம்பா இப்டி பண்ணேன்னு கேக்க முடியுமா? அவனுக்கு நான் என்ன திருப்பிக் கொடுபேன்... ரொம்ப வெக்கமா இருக்கு. ராதாரவி சொன்னாரு, ஒரு வாரம் விரதம் இருந்ததா... அதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல... உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.
ஏன்னா... நான் ரொம்ப கொடுத்தேன்னு சொல்ல முடியாது. ஆனா டெபனட்டா யார்கிட்டயும் வாங்கியும் பழக்கமில்லே. எப்டி சொல்றது... என்னோட நன்றி!
ராணா பண்ணும்போது உடம்பு சரியில்லாம போச்சு . ராணா என்கிற கேரக்டரை ரொம்ப பெரிசா பர்பார்ம் பண்ணனும்னு முயற்சி பண்றப்பதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.
அது சீரியஸா போனதுல என் தப்பும் இருக்கு. உடனே மருத்துவமனையில் சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும்னு உடனே டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டேன். டாக்டர்கள் சொன்னாங்க, ரெண்டு நாள்ஆஸ்பிடல்ல இருந்து புல் செக்கப் பண்ணிக்கிட்டு சரி பண்ணிட்டு போங்கன்னு சொன்னாங்க. ஆனா நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். காரணம், ரெண்டு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்தா தேவையில்லாம வதந்திகள் வரும் என்பதால், வீட்லே இருந்து பண்ணிக்கலாம்னு வந்துட்டேன். அதனால என் உடல்நிலையை நானே கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிக்கிட்டேன்.
ஏன்னா... நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் இது நடந்தது. வாழ்க்கைல அப்பா அம்மா, கடவுளை விட, மனைவியை விட நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நல்லாருக்கும். நான் சில கெட்ட நண்பர்களால குடிப்பழக்கத்துக்கு ஆளானேன். அதன் பிறகு நடிக்க வந்த பிறகு குடி இன்னும் அதிகமாகிடுச்சி. நல்ல சரக்கு, சரக்குன்னு தேடி குடிக்க ஆரம்பிச்சு, வேலை வேலைன்னு பிஸியாகி, தூக்கமில்லாம நெர்வ்ஸ் பிரேக் ஆன விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியும்.
அதன் பிறகு திருமணத்துக்குப் பிறகு, என் அருமை மனைவி லதாவின் அன்பாலும் ஆதரவினாலும் குடிப் பழக்கத்திலிருந்து மெல்ல மீண்டேன். அதுக்காக நான் ஒரேயடியாக விட்டுட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனால் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி பண்ணிக்கிட்டேன். மது இல்லாம தூங்க முடியும், இருக்க முடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டேன். யோகா, உடற்பயிற்சி என பண்ணிக்கிட்டிருந்தாலும், சிகரெட் பழக்கத்தை மட்டும் விட முடியல.
என் உடம்பு இவ்வளவு மோசமானதுக்கு காரணமே அந்த சிகரெட் பழக்கம்தான். நான் அனுபவிச்சி சொல்றேன், ரொம்ப அடிபட்டு சொல்றேன்... அந்த சிகரெட் பழக்கத்தை மட்டும் உடனே விட்டுடுங்க. தயவு செஞ்சி விட்டுடுங்க.
எனக்கு இஸபெல்லா ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்.
எனக்கு உடம்பு மோசமா போனதும், ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க. அங்கு டாக்டர்கள் என்னை அருமையா கவனிச்சிக்கிட்டாங்க. டாக்டர் தணிகாசலம் உள்ளிட்டவர்கள் அப்படி பாத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் பின்னாலதான் நான் கேள்விப்பட்டேன். அங்க இருந்தப்போ பெரும்பாலும் என்னை மயக்க நிலையில்தான் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல இருந்தப்போ என்னோட கிட்னில பாதிப்பு ஏற்பட்டுச்சி. உடம்புல உள்பாகங்கள்ல பாதிப்பு ஏற்பட்டா, ஸ்டெராய்ட் குடுத்துதான் சரிபண்ணுவாங்க. ஸ்டெராய்ட் கொடுக்கும்போது, முதலில் சரியானா கூட, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ரொம்ப மோசமா இருக்கும். எனக்கு நிறைய மெடிசன்ஸ் கொடுத்தாங்க. விவிஐபியா இருக்கிறதுல ப்ளஸ்ஸும் இருக்கு மைனஸும் இருக்கு. எனக்கு மெடிசன்ஸ் அதிகமாயிட்டதால, அதனோட எஃபெக்ட்ஸே ஆறேழு மாசத்துக்கு இருந்தது. இதை நான் இதுவரைக்கும் யாருக்கும் சொல்லல.. ஏன்னா என்னை வாழ வச்ச தெய்வங்களான உங்ககிட்ட இதை முதல்முதலா சொல்றேன்.
இந்த ஸ்டீராய்டு மெடிசன்களால உடம்பு சரியான பிறகுகூட, அந்த பவர் போனதும் அப்படியே உடம்பும் மனசும் வீக்காயிடும். இந்த எஃபெக்ட்லருந்து முழுசா மீண்டு, கடந்த மூணு நாலு மாசமாவே 100 சதவீதம் நான் சரியாகிட்டேன்.
அதுக்கு முக்கிய காரணம், எந்த மெடிசனா இருந்தாலும் அதுக்கு உடம்பு உடனடியா ரியாக்ட் பண்ணனும். உடம்பு ரியாக்ட் பண்ணலன்னா, எந்த மெடிசனும் வேலை செய்யாது. என் உடம்பு வேகமா ரியாக்ட் பண்ண விதத்தைப் பார்த்து டாக்டர்களே அதிசயப்பட்டாங்க. அதைப் பார்த்தபிறகுதான் மருந்தின் அளவை படிப்படியா குறைச்சாங்க.
இப்போ முழுமையாக ஆரோக்கியமா இருக்கேன்னு சொன்னா, அதுக்கு உங்க, அன்பு பிரார்த்தனைகள்தான் காரணம்.
இந்த அன்புக்கு என்ன பண்ணப்போறேன்... எப்படி செய்யப் போறேன்னு தெரியல. ஏன்னா எதுவும் என் கையில இல்லே. ஆனால் பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் தயாரா இல்லே. ஆனா நிச்சயமா சொல்றேன், நீங்க முதல்ல உங்க குடும்பத்தை பாத்துக்கங்க, அப்பா அம்மா குழந்தைகளைக் கவனிங்க. உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்," என்றார்.
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?