Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளைத் திருடுகிறார்கள்- கமல் ஹாஸன்
ஹைதராபாத்: ஹாலிவுட்காரர்கள் நம் படங்களிலிருந்து கதைகளைத் திருடுகிறார்கள் என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
ஹைதராபாதில் இன்று செய்தியாளர்களுக்கு கமல் ஹாஸன் அளித்த பேட்டி:
என் படங்கள் வெளியாக தாமதமாவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. விஸ்வரூபம் படத்தை ஆறு மாதத்தில் முடித்தேன். சில பிரச்சினைகளால் அது தாமதம் ஆனது.
விஸ்வரூபம்-2 படத்தை மூன்று மாதத்தில் முடித்தேன். தயாரிப்பு தரப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தமவில்லன், பாபநாசம் படங்களும் முடிந்துள்ளது.
ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது கஷ்டமா?
விதவிதமான கேரக்டர்களில் ஒரே நேரத்தில் நடிப்பது எனக்கு புதிது அல்ல. மரோசரித்திரா, மன்மதலீலை படங்களில் ஒரே நேரத்தில் நடித்து இருக்கிறேன்.
ரமேஷ் அரவிந்தை வைத்து இயக்குவது ஏன்?
நடிப்பு, இயக்கம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது சிரமமானது. இந்த படத்தில் மேக்கப்புக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டிய இருந்தது. ரமேஷ் அரவிந்தும் நானும் ஒரே மாதிரியான எண்ண ஒட்டத்தை உடையவர்கள்.
உத்தம வில்லனில் பாலச்சந்தர்
பாலச்சந்தர் நடித்ததால் உத்தமவில்லன் படத்தை என்னுடைய சொத்தைப் போல் கருதுகிறேன். நடிகன் என்ற வாழ்க்கையே அவர் கொடுத்ததுதான். பாலசந்தர் இல்லாவிட்டால் நான் நடிகனாகி இருக்க மாட்டேன். உதவி இயக்குனராகவோ, டான்ஸ் மாஸ்டராவோ இருந்து இருப்பேன்.
பிடித்த நடிகர்கள்
அது நிறைய பேர் இருக்கிறார்கள். தெலுங்கு பட உலகில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் என பலர். ஊட்டியில் ஒரு படப்பிடிப்புக்காக சென்று ஓட்டலில் தங்கி இருந்தபோது அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தேன். பக்கத்து அறையில் சத்தம் கேட்டது. போய் பார்த்தேன். அங்கு என்.டி.ராமராவ் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். நான் தேவை இல்லாமல் அதிகாலையில் எழுந்திருக்க மாட்டேன். எஸ்.வி.ரங்கராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்கு பிறகு வரவில்லை. எஸ்.வி.ரங்காராவ் ஒரு மகாநடிகர். அவர். மாதிரி நடிகர்கள் வராதது வேதனை அளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ் மாதிரி, நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும்
கதைத் திருட்டு
ஹாலிவுட்காரர்கள் நம் கதைகளை திருடுகிறார்கள். தெலுங்கில் நான் நடித்த சுவாதி முத்யம் படத்தின் கதையை, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் பாரஸ்ட் ஹம்ப் என்ற படமாக எடுத்தார்கள். அவர்கள் மீது நாம் வழக்குதான் போட வேண்டும்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்