Just In
- 6 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 7 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 7 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 9 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கு முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள் யாரும் தேவையில்லை! - சந்தானம்
சென்னை: முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் யாரும் எனக்குத் தேவையில்லை. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறத உள்ளங்கள் இருந்தா போதும், என்றார் நடிகர் சந்தானம், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.
கெட்ட நேரம் சொல்லிக் கொண்டு வருவதில்லை... அது அவரவர் நாக்கிலேயே எப்போதும் உட்கார்ந்திருக்கிறது, என்பார்கள். இது எல்லாருக்கும் பொருந்தும், அதுவும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவே வேண்டாம்!

சந்தானத்துக்கு கிட்டத்தட்ட அப்படியொரு நேரம் ஆரம்பமாகப் போகிறது என்பதுதான் நேற்று அவர் பேச்சைக் கேட்ட அத்தனை பேரின் கமெண்ட்ஸும்.
அவர் ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தேவி தியேட்டரில் நடந்தது.
ஏதோ ரசிகர் மன்ற மாநாடு மாதிரி ஆட்களைக் குவித்திருந்தார் சந்தானம். தெலுங்கு தேசத்திலிருந்து இயக்குநர் ராஜமவுலியையும் அழைத்திருந்தார். இவர் எடுத்த மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்தான் இந்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!
திரையில் சின்ன வேடத்தில் வந்தாலும், பேசியே கொல்லும் ஸ்ரீநாத்-தான் இந்தப் படத்தின் இயக்குநர். மைக்கைப் பிடித்தவர் நான்கைந்து படங்களுக்குச் சேர்த்தே பேசிவிட்டுத்தான் இறங்கினார்!
அடுத்துப் பேசிய சந்தானம், " எவ்ளோ காலத்துக்குதான் ஹீரோவோட லவ்வுக்கு உதவி பண்ற மாதிரியே நடிக்கிறது... அதான் இப்போ நானே ஹீரோவா களமிறங்கிட்டேன். என் ரசிகர்கள் என்னை நீண்ட நாட்களாக 'தலைவா.. தனி ஹீரோவா நடிங்க'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வரும் வரை காத்திருந்தேன். இப்போ அது வந்துருச்சி... என் ரசிகர்களுக்காகத்தான் இந்தப் படம் பண்றேன்.
என் ஏரியால அடிக்கடி பசங்க வந்து, மச்சான் அவன் என்னைக் கலாய்ச்சிட்டான்.. வாடா அவனை ஒரு கை பாக்கலாம்னு கூப்பிடுவாங்க.
நான் சொல்வேன், 'டேய் உங்களுக்கு தில் இருந்தா தனியா போய் மோதுங்கடா.. அடுத்தவனை எதுக்கு இழுக்கறே'-ன்னு.
நான் என்னை மட்டுமே இந்த சினிமால நம்பியிருக்கேன். அப்படி நம்பித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கேன். இந்தப் படத்துல இருக்கற ஒரு டெக்னீஷியன் பேரு கூட தயாரிப்பாளருக்குத் தெரியாது. அவங்ககிட்ட நான் சொன்னதே, என்னை மட்டும் நம்புங்க.. இந்தப் படத்தை முடிச்சித் தர்றேன்-ன்னு சொன்னேன். பெரிய பெரிய டெக்னீஷியன்களை நம்பவில்லை. நான் என்னை மட்டுமே நம்பி இறங்கியிருக்கேன்.
இந்த விழாவுக்குக் கூட முன்னணி ஹீரோக்களையோ இயக்குநர்களையோ நான் கூப்பிடவில்லை. அவர்களைவிடட, நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்கதான் எனக்கு வேணும். அவர்களைத்தான் இங்கே அழைச்சிருக்கேன்," என்று பேசிக் கொண்டே போனார்!