Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் விபத்தில் சிக்கினேனா?: சிவகார்த்திகேயன் விளக்கம்
சென்னை: தான் விபத்தில் சிக்கி காயம் அடையவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான காக்கிச் சட்டை ஹிட்டாகியுள்ளது. அந்த சந்தோஷத்தில் அவர் ரஜினிமுருகன் படத்தில் தெம்பாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிவா காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சிவகார்த்திகேயன் காதுகளையும் எட்டியது. உடனே அவர் ட்விட்டரில் இது பற்றி விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு தெம்பை அளித்துள்ளார்.
Good Morning Friends😊 Read rumours about me..I'm fine😊Now in Madurai Shooting for #RajiniMurugan..Getting ready for first look on April 25👍😊
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 2, 2015
ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
என்னை பற்றி வதந்தியை படித்தேன். நான் நலமாக உள்ளேன். மதுரையில் ரஜினிமுருகன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளேன். ஏப்ரல் 25ம் தேதி பர்ஸ்ட் லுக்கிற்கு தயாராகி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்பும் கூட சிவா விபத்தில் சிக்கியதாக செய்தி வெளியானது. அதை பார்த்து பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். அதன் பிறகு தான் அவர் விபத்தில் சிக்கியதாக வெளியான தகவல் பொய் என்பது தெரிய வந்தது.