Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயம் ரவியும், ஐந்து அழகிகளும்!
ஐந்து அழகிய நாயகிகளுடன் ஜெயம் ரவி ஜோடி போடும் வித்தியாசமான ஒரு படத்தைக் கொடுக்கவிருக்கிறார், இயற்கை, ஈ பட இயக்குநர் ஜனநாதன்.
தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வித்தியாசமான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அவர் இயக்கத்தில் முதலில் வெளிவந்த இயற்கை பெரும் வரவேற்பைப் பெற்றது. கமர்ஷியலாக இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அழகான படமாக வரவேற்கப்பட்டது, பாராட்டு பெற்றது.அடுத்து ஜீவாவை வைத்து ஜனநாதன் இயக்கிய ஈ பெரும் வசூலை அள்ளிக் கொடுத்து ஜனநாதனால் பாப்புலர் கதையையும் படமாக்க முடியும் என்பதை நிரூபிக்க உதவியது.
இந்த நிலையில் அடுத்து ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் ஜனநாதன். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஐந்து ஜோடிகளாம்.
உண்மையில் இந்தக் கதையை கமல்ஹாசனுக்காகத்தான் எழுதினாராம் ஜனநாதன். ஆனால் கமல், தசாவதாரத்தில் பிசியாக இருப்பதால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்தே ஜெயம் ரவியை தனது நாயகனாக்க முடிவு செய்தாராம் ஜனநாதன்.
இது என்ன மாதிரியான படம் என்று ஜனநாதனிடம் கேட்டபோது இது வழக்கமான படமாக இருக்காது. தமிழ் சினிமா ரசிகர்களுக்காக ஒரு புதுமையான உத்தியைக் கடைப்பிடித்து வித்தியாசமான படத்தைக் கொடுக்கப் போகிறேன்.
கன மழை பெய்யும் அடர்ந்த காடுகளில் இப்படத்தை படமாக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.
இந்தப் படத்தின் லொகேஷன்களை தேர்வு செய்வதற்காக சமீபத்தில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விசிட் அடித்தார் ஜனநாதன். அவருடன் கேமராமேன் ஏகாம்பரமும் சென்றிருந்தார்.
அதேபோல ஐந்து நாயகியர்களை தேர்வு செய்யும் முயற்சியிலும் ஜனநாதன் பிசியாக உள்ளார். அய்ங்கரண் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் எழுத்து உ என்று ஆரம்பிக்குமா ஜனநாதன் சார்?
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!