Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்- திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கமல்
கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று திரிஷாவுக்கு ஆதரவாக கமலஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை திரிஷா அமெரிக்க விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதராக உள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா தான் காரணம் என்பதால் நடிகை திரிஷாவை சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி தரக்குறைவாக பேசுபவர்கள் தமிழர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும் என்று திரிஷா பதில் அளித்திருந்தார்.
இதனையடுத்து நெட்டிசன்கள் டுவிட்டரில் வறுத்து எடுத்து வருகின்றனர். திரிஷாவை டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துக்களால் வறுத்து எடுப்பதைப் பார்த்து திரை உலக பிரபலங்கள் பலர் திரிஷாவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.
கமல் ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என்று காளைகள் கொல்லப்படுவது பற்றி கருத்து சொன்ன கமலஹாசன், பாவம் அறியாத பெண் தெரியாமல் செய்து விட்டார். அவர் அளவுக்கு நீங்கள் இறங்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
வாழ வழி செய்வோம்
கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். எனது ஆதரவு எப்போதும் நாகரீகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
|
டிவி தொகுப்பாளின் பாவனா
திரிஷாவிற்கு ஆதரவாக விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். டுவிட்டரில் இது போன்று பதிவிடுபவர்கள் கோழைகள். தங்களை யார் என்று வெளிக்காட்டி கொள்ளாமல் மறைமுக அடையாளங்கள் மூலம் தாக்குவார்கள். இதை பெரிதுபடுத்தாமல் நீங்கள் உறுதியாக இருங்கள் திரிஷா என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
|
தமிழன் என்பதில் பெருமை
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் அதே நேரத்தில் இதுபோன்று அடுத்தவர்களை காயப்படுத்தும் கருத்துக்களை பதிவிடுவதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன் என்றும் பாவனா குறிப்பிட்டுள்ளார்.
|
ராதிகா பதிவு
திரிஷாவிற்கு ஆதரவாக ராதிகா, சின்மயி ஆகியோரும் கருத்து கூறியுள்ளனர். இதற்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உடனே ராதிகா, நானும் சரத்குமாரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவர்களே என்றும் 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக அவர் போராட்டம் நடத்தியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.