எமதியக்கத்தை சந்தேகமோ பயமோ இன்றி வாழ்த்தியவர் இருவர் எம்.ஜி.ஆர். கலைஞர்: கமல்
சென்னை: ஊடக விளம்பரம் தேடாமல் 30வருடங்கள் அமைதியாக நற்பணி செய்துவரும் எமதியக்கத்தை சந்தேகமோ பயமோ இன்றி வாழ்த்தியவர் இருவர் எம்.ஜி.ஆர். கலைஞர் என ட்வீட்டியுள்ளார் கமல் ஹாஸன்.
தமிழக அரசியல் சூழல் குறித்து கமல் ஹாஸன் தினமும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் சன் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வந்த குழந்தை ரிஹானா மற்றும் தனது நற்பணி இயக்கத்தை பற்றி ட்வீட்டியுள்ளார்.
இரண்டு ட்வீட்டுகளுமே தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஹானா
ரிஹானா டி.வி.யில் பாடும் குழந்தை சந்தோஷத்திலெனைக் கண்கலங்க வைக்கிறார். ஒரு தகப்பனாக இனிய flashback.6 வயது ஸ்ருதி நடிகர் திலகத்துடன் பாடியது.
இருவர்
ஊடக விளம்பரம் தேடாமல் 30வருடங்கள் அமைதியாக நற்பணி செய்துவரும் எமதியக்கத்தை சந்தேகமோ பயமோ இன்றி வாழ்த்தியவர் இருவர் எம்.ஜி.ஆர். கலைஞர்.
அனுதாபங்கள்
சந்தேகமும் பயமும் கொண்டு உங்கள்( @ikamalhaasan ) இயக்கத்தை வாழ்த்த மறந்த உள்ளங்களுக்கு(சான்றோருக்கு)
ஆழ்ந்த அனுதாபங்கள் 😁
புரிந்தது
@ikamalhaasan சூப்பரு கமல் போட்ட ட்விட்டை முதல்முறையா படித்தவுடனே புரிஞ்சிடுச்சி!
போடற வெடியை
வாழ்த்துக்கள்
@ikamalhaasan எழுபதுகளில் எழுந்த உணர்வு .எங்கோ உயர கொண்டு சென்று விட்டது.. சக வயதினன் நான்.. நல்நோக்கங்களை நன்கறிவேன்... வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











