Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எனக்கு முதலில் தேசிய விருது கிடைக்கட்டும், அப்புறம் அதை திருப்பிக் கொடுக்கிறேன்: ஷாருக்கான்
மும்பை: நாட்டில் சகிப்புதன்மை குறைந்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் விருதுகளை திருப்பிக் கொடுப்பதை மதிக்கிறேன். ஆனால் நான் என் விருதை திருப்பிக் கொடுக்க மாட்டேன். எனக்கு தேசிய விருது கிடைக்கட்டும் அதன் பிறகு அதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறுகையில்,
சகிப்புத்தன்மை
நாட்டின் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய பிரச்சனை ஆகும். நான் செய்ய விரும்பாததை செய்யுமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு தேசிய விருது கிடைக்கட்டும். அதன் பிறகு அதை நான் திருப்பிக் கொடுக்கிறேன்.
விருதுகள்
விருதுகளை திருப்பிக் கொடுத்து வரும் எழுத்தாளர்களின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்காக நானும் விருதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இல்லை.
கற்கள்
அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நான் என் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாது. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறோம். நான் கருத்து தெரிவித்தால் மக்கள் என் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குகிறார்கள்.
கலைஞர்கள்
படைப்பாற்றல் மதம் சார்ந்தது அல்ல. படைப்பாற்றலுக்கும் சாதி, மதத்திற்கும் தொடர்பு இல்லை. கலைஞர்களை மதிக்கிறோம். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது முக்கியம் இல்லை என்றார் ஷாருக்கான்.