Don't Miss!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நட்பில் துவங்கி உறவாக மாறிய ஆர்.சி.சக்தி... கமல் துயரம்
சென்னை: கலைஞனாக, நண்பனாக, உறவாக இருந்த ஆர்.சி.சக்தியின் மறைவு தனக்கு பெரும் இழப்பு என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
‘ஸ்பரிசம்', ‘சிறை', ‘வரம்', ‘உண்மைகள்','கூட்டுப்புழுக்கள்', ‘பத்தினிப் பெண்', ‘தாலி தானம்' உட்பட பல படங்களை இயக் கியவர் ஆர்.சி.சக்தி. ரஜினிகாந்த் நடித்த ‘தர்மயுத்தம்', கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்', ‘மனிதரில் இத்தனை நிறங்களா?' விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட ‘சிறை' படம் ஆர்.சி.சக்திக்கு புகழை பெற்றுத் தந்தது.
இந்நிலையில், நோய்த் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சக்தி, சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.
நடிகர் கமலுக்கு மிகவும் நெருக்கமானவர் சக்தி. ‘என் நண்பர். என் குரு' என்று கமலால் அன்போடும் மரியாதையோடும் குறிப்பிடப்படுபவர்.
சக்தியின் மறைவு செய்தி கேட்டு, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் கமல். அப்போது அவர் கூறியதாவது :-
‘‘கலைஞனாக, நண்பனாக, உறவாக ஆர்.சி.சக்தியின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. நட்பில் துவங்கி உறவாக மாறியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நல்ல நண்பன். ரசிகன். கடைசி வரை நல்ல நண்பராக இருந்தது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் அப்படித்தான். முக்கியமாக, முதல் தர ரசிகராக இருந்த சக்தி அண்ணனின் இழப்பை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு:
சக்தி மறைவு தொடர்பாக நடிகர் சிவக்குமார் கூறுகையில், "நல்ல இயக்குநர்களில் ஆர்.சி. சக்தி குறிப்பிடத்தக்கவர். நான் அவருடைய படங்களின் ரசிகன். அவரது படங்களில் வசனம் இயல்பாக அர்த்தமுள்ளதாக இருக்கும். சினிமாவை வித்தியாச மான கோணத்தில் அணுகிய படைப்பாளி. கமல்ஹாசனை ஒரு இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக வெளிக்கொண்டு வந்ததில் ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு பெரிது" எனத் தெரிவித்தார்.
நடிகை லட்சுமி கண்ணீர்:
சிறை உட்பட ஆர்.சி.சக்தியின் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லட்சுமி. சக்தியின் மறைவு தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘நடிகை, இயக்குநர் என்ற நிலையைத் தாண்டி என்னைத் தன் தங்கையாகவே கொண்டாடியவர் ஆர்.சி.சக்தி. பெண்களின் பார்வையை, அவர்களது மனதை, அவர்களது உள்ளக் கிடக்கையைத் தனது படைப்புகளில் முழுமையாக வெளிப்படுத்தியவர். சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான படைப்பாளி அவர். தனது கதாபாத்திரத்தை மிகையாக வெளிப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவரது மறைவை ஈடு செய்யமுடியாத இந்த நேரத்தில் நான் அவரது படங்களின் கதாநாயகி என்பதைப் பெருமையுடன் எண்ணிப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறேன்" என்றார்.
மறைந்த ஆர்.சி.சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.