இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியாக நடமாடலாம்.. மம்முட்டி
கொச்சி: கேரள அரசு மது பார்களை மூட உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். இனி பெண்கள் நிம்மதியாக, பயமின்றி நடமாட இது உதவும் என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.
கொச்சியில், கல்லூரி, பள்ளி வளாகங்களில் போதை பொருட்களை அனுமதிக்கக் கூடாது எனவும், மாணவர்களிடம் போதையின் தீமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் 12 ஆயிரம் கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நடிகர் மம்முட்டி இதில் கலந்து கொண்டு பேசினார்.
மம்முட்டி அப்போது கூறுகையில், கேரள அரசு பூரண மதுவிலக்கை மாநிலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது பாராட்டுக்குரியது. கேரளாவில் பூரண மதுவிலக்கு, மது ஒழிப்பு கோரிக்கைக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளது. நானும் இது தொடர்பான போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன்.
தற்போது மாநிலத்தில் உள்ள மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் இனி பெண்கள் பயமின்றி வெளியில் நடமாடும் சூழ்நிலை உருவாகும். இது மிகவும் நல்ல முடிவு என்றார் மம்முட்டி.


Click it and Unblock the Notifications











