நானும், ஹன்சிகாவும் பிரிய நீங்கள் நினைப்பது காரணம் அல்ல: சிம்பு
சென்னை: தானும், ஹன்சிகாவும் பிரிய தனிப்பட்ட விஷயங்கள் காரணம் இல்லை என சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் நடிக்கையில் காதலில் விழுந்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அதன் பிறகு காதல் முறிவு குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் ஹன்சிகா இது பற்றி பேசவில்லை.
இந்நிலையில் இது குறித்து சிம்பு கூறுகையில்,

ஹன்சிகா
ஹன்சிகாவுடனான காதல் தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் நடக்கவில்லை.

காரணம்
நானும், ஹன்சிகாவும் பிரிய தனிப்பட்ட விஷயங்கள் காரணம் இல்லை. பிற காரணங்களுக்காக பிரிந்துவிட்டோம்.

வாலு
காதல் முறிந்த பிறகும் நானும், ஹன்சிகாவும் பாங்காக் சென்று வாலு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம்.

நயன்தாரா
நானும், நயன்தாராவும் பிரிந்துவிட்டாலும் இன்றும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.

இது நம்ம ஆளு
இது நம்ம ஆளு படத்திற்கு ஏற்ற ஹீரோயின் அவர் தான் என பாண்டிராஜ் நினைத்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்திருந்தது. அதனால் நாங்கள் சேர்ந்து நடித்தோம் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











