Don't Miss!
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- News கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச முன்பதிவு.. ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஐகோர்ட் கிளை கேள்வி
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார், எதிர்த்து போராட வேண்டும்: மன்சூர் அலிகான்
சென்னை: பிரதமர் மோடி நம்மை எல்லாம் ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார் என நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் மன்சூர் அலி கான் கொஞ்சம் கொஞ்சம் பட இசை வெளியீட்டு விழாவில் கூறுகையில்,
மோடி
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்து பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டார்.
ராப்பிச்சைக்காரன்
நம் அனைவரையும் மோடி ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார். மக்கள் சில்லரை இல்லாமல் வீதி வீதியாக அலைகிறார்கள். சில்லரை வாங்க வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நாள் முழுவதும் நிற்கிறார்கள்.
பணம்
செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். இதனால் அவர்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லவில்லை. கடந்த 5 நாட்களாக தியேட்டர்கள் காத்து வாங்குகின்றன.
போராட்டம்
மோடியின் நடவடிக்கையால் சினிமா துறை முடங்கிவிட்டது. இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து போராட வேண்டும்.
ரூ.2000
ரூ.2000 நோட்டை மடித்து பாக்கெட்டில் நான்கு முறை வைத்தால் கிழிந்துவிடும். அந்த நிலையில் உள்ளது. நம் கலைஞர்களிடம் கேட்டிருந்தால் கூட இதை விட நல்ல நோட்டை அளித்திருப்பார்கள்.