மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜீத்
சென்னை: நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது. மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.
பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு துவங்கியவுடன் வாக்களித்தார்.

இந்நிலையில் அஜீத் குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர்.
Comments


Click it and Unblock the Notifications