காமெடியில், 'நண்பேன்டா' மற்றுமொரு 'ஓகே ஓகே': உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ஜெகதீஷ் இயக்கத்தில், உதய நிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் திரைப்படம், நண்பேன்டா. சந்தானம், நயன்தாரா போன்ற முன்னணி ஸ்டார்களும் படத்தில் உண்டு.
இந்நிலையில், செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு, உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: மூன்று குழந்தை பருவ நண்பர்கள், சண்டைபோட்டு, பிரிந்து மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைவதுதான், நண்பேன்டா படத்திந், ஒன்லைன் ஸ்டோரி.

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நானும், சந்தானமும் இணைந்து வந்த காட்சிகளுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதேபோல, நண்பேண்டா படத்திலும், ரசிகர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இரண்டாம் பாகம் போல நண்பேன்டா இருக்க போகிறது.
ஆதவன் படத் தயாரிப்பு முதலே, நடிகை நயன்தாரா எனக்கு பழக்கம். நண்பேன்டா படத்தின் கதையை கேட்டதும், தனது கேரக்டருடன் ஒத்துப்போக கூடிய ஹீரோயின் கதாப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளதாக கூறி மகிழ்ந்த நயன்தாரா, இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். அவருடன் இணைந்து நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது.
ஒரு கல் ஒரு கண்ணாடியில், என்னைவிட, சந்தானத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததாக நண்பேன்டா இயக்குநர் கருதினார். எனவே, இப்படத்தில், இருவருக்கும் சரிசமமான கேரக்டர்கள் தரப்பட்டுள்ளன. நான் பொதுவாக ஆக்ஷன் செய்ய விரும்புவதில்லை. காமெடியோடு நிறுத்திக்கொள்ள விரும்புவேன். ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, நண்பேன்டா படத்தில் சிறு ஆக்ஷன் காட்சியை வைத்துள்ளோம்.
லண்டன், பாலி, அயர்லாந்து ஆகிய பகுதிகளில், 3 பாடல்களை ஷூட் செய்துள்ளோம். பாடல்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக வரும். இவ்வாறு உதய நிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி, அடுத்ததாக 'கெத்து' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக 'இதயம் முரளி' என்ற படத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











