Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நரேனுக்கு நிச்சயதார்த்தம்
சித்திரம் பேசுதடி நாயகன் நரேனுக்கும், அவர் காதலித்து வந்த மஞ்சுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடந்தது. 26ம் தேதி இவர்களின் கல்யாணம் நடைபெறவுள்ளது.
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் மலையாளத்து நரேன். இப்படத்தைத் தொடர்ந்து கதை கேட்கிறேன் என்று ஏகப்பட்ட பந்தா விட்ட நரேன், தன்னைத் தேடி வந்த கதைகளை நிராகரித்து வந்தார்.பின்னர் ஒரு வழியாக நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான பள்ளிக்கூடம் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கும், கோழிக்கோட்டைச் சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்தக் காதலை பொத்திப் பொத்தி வைத்திருந்தார் நரேன்.
இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்ததைத் தொடர்ந்து கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து கோழிக்கோட்டில் உள்ள மஞ்சுவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். கோழிக்கோட்டில் உள்ள சின்மயாஞ்சலி கலையரங்கில் வருகிற 26ம் தேதி காலை 10.30 மணிக்கு நரேன், மஞ்சு கல்யாணம் நடக்கவுள்ளது.
திருமணத்தை கேரளாவில் வைத்துள்ள நரேன், சென்னையிலும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி சென்னையில் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் வரவேற்பு நடக்கிறது.