Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனிமேல் நான் நல்லவன் - சிம்பு
கெட்டவன் படம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் காளை படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. புதிதாக சிலம்பாட்டம் படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய முடிவை எடுத்துள்ளார் சிம்பு. அது இனிமேல் தான் நடிக்கும் படங்களில் சமூகத்திற்குத் தேவையான மெசேஜ் இருக்குமாம். மேலும் பெண்களை மோசமாக சித்தரிக்கும், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் கேரக்டர் போன்றவற்றில் நடிக்க மாட்டாராம் சிம்பு.
சிலம்பாட்டம் குறித்து சிம்பு கூறுகையில், சிலம்பாட்டம் படத்தில் ரொம்ப அமைதியான, மென்மையான கேரக்டரில் நடிக்கிறேன். சாந்தமாக இருக்கும் இளைஞன் எப்படி ஆக்ரோஷமாக வெகுண்டு எழுகிறான் என்பது தான் கதை.
இந்த கதையை இயக்குனர் சரவணனிடம் கேட்பதற்கே அவரை இழுத்தடித்து விட்டேன். இப்போது அடடா.. ரொம்ப தப்பு பண்ணிட்டோமே என்று ஃபீல் பண்ணுகிறேன். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை சிலம்பாட்டம்.
இனிமேல் நான் எந்த படத்திலும் கெட்டவனாக நடிக்கப் போவதில்லை. பெண்களை மோசமாக சித்தரித்து காட்டும் கதை கொண்ட படத்தில் நடிக்கப் போவதில்லை.
முன்பு இளைஞர்களுக்காக படம் பண்ணினேன். ஆனால் இப்போதெல்லாம் என்னுடைய நடிப்பு தாய்க்குலங்களையும்,
குழந்தைகளையும் போய் சேர வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம் என்றார் சிம்பு.
தட்ஸ்குட்!