Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்! - நடிகர் பிரபு
கோவை: தமிழக - கர்நாடக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில விஷமிகள்தான் இந்த விஷயத்தை பிரச்சினையாக்குகிறார்கள் என்றார் நடிகர் பிரபு.
கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் பேசுகையில், "காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. அதன் வழியில் நடிகர் சங்கம் செல்லும்.
தமிழக, கர்நாடக மக்களிடையே எந்த மோதலும் இல்லை. கர்நாடக மக்கள் காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு காட்டவில்லை. தமிழக விவசாயிகளின் கஷ்டம் கன்னட விவசாயிகளுக்குப் புரியும்.
ஆனால் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில அமைப்புகள் இதை அரசியலாக்குகின்றன.
காவிரி விவகாரத்தை அரசியலாக்க கூடாது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்பட வேண்டும்," என்றார்.