#ஜல்லிக்கட்டு பற்றி நான் சொன்ன நல்லதை மட்டும் யாருமே கண்டுக்கல: ஆர்யா
சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து நான் பேசிய நல்லதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும் அமீரின் இயக்கத்தில் சந்தனத் தேவன் என்ற படத்தில் நடிக்கிறார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சந்தனத் தேவன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆர்யா கூறுகையில்,
அந்த சர்ச்சைக்கு முன்பும், பின்பும் ஜல்லிக்கட்டு பற்றி நான் கூறிய நல்ல விஷயங்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. நான் ஜோக்காக அப்படி கேட்டேன், மக்கள் அதை செய்தியாக்க முடிவு செய்துவிட்டார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தற்போது உள்ள மவுசால் நாங்கள் சந்தனத் தேவன் படத்தை எடுக்கவில்லை. அமீர் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்றார்.
ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று ஆர்யா ட்விட்டரில் கேட்டு பலரிடம் திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











