Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்
பாரத ரத்னா விருது பெறும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை.. நாடு இப்போது தந்திருக்கும் கவுரமே பெரியது என நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்மவிபூஷண்' வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மம்தா கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "அமிதாப்பச்சனுக்கு பத்மவி பூஷணுக்கு பதிலாக பாரத ரத்னா விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்.. அதற்கு தகுதியானவர் அவர்," என கூறியிருந்தார்.
அமிதாப்
இதற்கு அமிதாப் பச்சன் தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் இப்படி பதிலளித்திருந்தார்:
"மம்தா அவர்களே, பாரத ரத்னா என்ற அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு இப்போது தந்திருப்பதே மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்," என்றார்.