Don't Miss!
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பசங்க 2 படத்திற்கு பேனர், கட் அவுட் வேண்டாம்... இது சூர்யாவின் வேண்டுகோள்
சென்னை: தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் பசங்க 2 படத்திற்கு பேனர், கட் அவுட் போன்றவை வேண்டாம். அதற்குப் பதிலாக மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வருகின்ற 24 ம் தேதி பசங்க 2 திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிந்து மாதவி, அமலாபால் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
வழக்கமாக தங்களது அபிமான நடிகர்கள் நடிக்கின்ற படத்திற்கு ரசிகர்கள் கட் அவுட், பேனர் ஆகியவற்றை வைப்பார்கள். ஆனால் நடிகர் சூர்யா தனது படத்திற்கு இவை எதுவும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது "சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களின் மனித நேயப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாகவே சொல்லியிருக்கிறேன்.
வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள 'பசங்க 2' திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலையைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்". என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
#AgaramSOS update: Medical Camp to be conducted on 20th Dec in villages adopted by Agaram at Tiruvallur for 600 ppl in Assn with Apollo Hosp
— Suriya Sivakumar (@Suriya_offl) December 16, 2015
மேலும் இது தவிர வருகின்ற 20 ம்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தான் தத்தெடுத்து இருக்கும் கிராமங்களில் உள்ள 600 பேருக்கு அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் ஒன்றை சூர்யா நடத்தவிருக்கிறார்.