Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஜீவனின் 'பயணிகள் கவனத்திற்கு'
யுனிவர்சிட்டி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ஜீவன். தலை நிறைய நிரம்பி வழிந்த முடியுடன் வந்து போன ஜீவன் அப்படத்திற்குப் பிறகு, நல்ல வாய்ப்புக்காக நீண்ட காலம் காக்க வேண்டியிருந்தது - காக்க காக்க படம் வரும் வரை.
காக்க காக்க படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார் ஜீவன். இப்படம் ஜீவனுக்கு பெரிய பிரேக் ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து நிறை படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பே வந்தது. ஆனாலும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவெடுத்தார் ஜீவன். இதனால் வந்த வில்லன் வாய்ப்புகளையெல்லாம் உதறித் தள்ளினார்.
அவருடைய காத்திருப்பு வீண் போகவில்லை. திருட்டுப்பயலே படத்தின மூலம் நிறைவேறியது. திருட்டுப்பயலே பெரும் வெற்றி பெற்றது. ஜீவனுக்கு ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது.
இதையடுத்து வந்த நான் அவனில்லை படமும் சூப்பர் ஹிட் ஆனதால், வேகமாக பிக்கப் ஆகி விட்டார் ஜீவன். சமீபத்தில் தீபாவளிக்கு காம்னா கூட்டணியில் வெளியான மச்சக்காரன் சுமாராக ஓடிக் கொண்டுள்ளது. படத்தால் யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது பிரியா மணியுடன் தோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜீவன். இந்தப் படத்தில் மாளவிகா இல்லையாம் (இதனால் ஜீவனுக்கு கொஞ்சம் வருத்தம்தானாம்).
இந்த நிலையில் அடுத்து இ.எல்.கே.புரொடக்ஷனஸ் தயாரிக்கும் பயணிகள் கவனத்திற்கு என்ற படத்தில் ஜீவன் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை இயக்குபவர் எஸ்.ஏ.விஜயகுமார். குறுகிய கால பட்ஜெட் படமாக அமையப் போகும் இந்தப் படம், ரயில் சம்பந்தப்பட்ட கதை.
ரயிலில் பயணிக்கும் ஜீவன் ஒரு சம்பவத்தை சந்திக்க நேரிடுகிறது. அதிலிருந்து அவரும் மீண்டும், பிற பயணிகளையும் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதையாம். படம் முழுக்க ரயிலிலேயே எடுக்கிறார்களாம்.
ஜீவனுக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரியாவை முதலில் அணுகினர். ஆனால் அவர் கால்ஷீட் டைட்டால் முடியாது என்று கூறி விட்டாராம். இதனால் இப்போது நயனதாரா அல்லது நமீதா ஆகிய இருவரில் ஒருவரைப் பிடிக்க முயன்று வருகின்றனராம்.