Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி இடைவெளி இருக்காது, அடிக்கடி என் படங்கள் ரிலீசாகும்!- பிரஷாந்த்
இனி எனது படங்கள் வெளியாவதில் பெரிய இடைவெளி இருக்காது. தொடர்ந்து என் படங்கள் வெளியாகும் என்றார் நடிகர் பிரஷாந்த்.
அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள சாஹசம் பட இசை வெளியீட்டு விழாவில் பிரஷாந்த் பேசுகையில், "இங்கு பேசியவர்கள் எனது படங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாக கூறினார்கள். பொன்னர் சங்கர் படம், மலையூர் மம்முட்டியான் படங்கள் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. இதனால் அடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. அந்த படங்கள் வித்தியாசமானவை.
இப்போது நான் நடித்திருக்கும் ‘சாஹசம்' முற்றிலும் மாறுபட்ட படம். தமன் இசையில் 5 பாடல்களும் சிறப்பாக வந்து இருக்கிறது. அதற்கான நடன காட்சிகளும் வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.
படத்துக்கு அதிக செலவு ஆனது பற்றி எனது தந்தை தியாகராஜன் கவலைப்படவில்லை. தாராளமாக செலவு செய்தார்.
நான் 17 வயதில் நடிக்க வந்தேன். இப்போது ஒன்றும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, மதன்பாபு, ரோபோ சங்கர், பிரியதர்ஷினி உள்பட அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.
இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். இனி எனது படங்கள் தொடர்ந்து வரும்," என்றார்.
தியாகராஜன் பேசும் போது, "வெற்றி பெற்ற பல மொழி படங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றை தொடர்ந்து ரீமேக் செய்து வெளியிடுவேன். அதில் பிரசாந்த் நடிப்பார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இசை சிறப்பாக உள்ளது," என்றார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப், ஜெர்மன், தாய்லாந்து தூதர்கள், டைரக்டர் அருண் குமார் சர்மா, இசை அமைப்பாளர் தமன் ரோகினி, நா.முத்துகுமார், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ரோபோசங்கர் தொகுத்து வழங்கினார்.