twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி இடைவெளி இருக்காது, அடிக்கடி என் படங்கள் ரிலீசாகும்!- பிரஷாந்த்

    By Shankar
    |

    இனி எனது படங்கள் வெளியாவதில் பெரிய இடைவெளி இருக்காது. தொடர்ந்து என் படங்கள் வெளியாகும் என்றார் நடிகர் பிரஷாந்த்.

    அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள சாஹசம் பட இசை வெளியீட்டு விழாவில் பிரஷாந்த் பேசுகையில், "இங்கு பேசியவர்கள் எனது படங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாக கூறினார்கள். பொன்னர் சங்கர் படம், மலையூர் மம்முட்டியான் படங்கள் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடந்தது. இதனால் அடுத்த படங்களில் நடிக்க முடியவில்லை. அந்த படங்கள் வித்தியாசமானவை.

    Prashant assures to release his movies frequently

    இப்போது நான் நடித்திருக்கும் ‘சாஹசம்' முற்றிலும் மாறுபட்ட படம். தமன் இசையில் 5 பாடல்களும் சிறப்பாக வந்து இருக்கிறது. அதற்கான நடன காட்சிகளும் வெளிநாடுகளில் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.

    படத்துக்கு அதிக செலவு ஆனது பற்றி எனது தந்தை தியாகராஜன் கவலைப்படவில்லை. தாராளமாக செலவு செய்தார்.

    நான் 17 வயதில் நடிக்க வந்தேன். இப்போது ஒன்றும் அதிக வயது ஆகிவிடவில்லை. இந்த படத்தில் நாசர், தம்பி ராமையா, மதன்பாபு, ரோபோ சங்கர், பிரியதர்ஷினி உள்பட அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.

    இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன். இனி எனது படங்கள் தொடர்ந்து வரும்," என்றார்.

    தியாகராஜன் பேசும் போது, "வெற்றி பெற்ற பல மொழி படங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றை தொடர்ந்து ரீமேக் செய்து வெளியிடுவேன். அதில் பிரசாந்த் நடிப்பார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. இசை சிறப்பாக உள்ளது," என்றார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு நவாப், ஜெர்மன், தாய்லாந்து தூதர்கள், டைரக்டர் அருண் குமார் சர்மா, இசை அமைப்பாளர் தமன் ரோகினி, நா.முத்துகுமார், உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ரோபோசங்கர் தொகுத்து வழங்கினார்.

    English summary
    Actor Prashant says that hereafter his movies would release in frequently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X