Just In
- 14 min ago
'நம் காதல் மட்டும்..' தனது காதலர் பிறந்த நாளுக்கு நடிகை பிரியா பவானி சங்கரின் டச்சிங் போஸ்ட்!
- 48 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 11 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 12 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
Don't Miss!
- News
பெங்களூர், ஒசூர் நகரங்களில் கடும் பனிப்பொழிவு.. காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்
- Automobiles
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்... தயாரிப்பாளர்கள்தானே தருகிறார்கள்? - விஷால்
சென்னை: நாங்களா அதிக சம்பளம் கேட்கிறோம்... தயாரிப்பாளர்கள்தான் நடிகரின் மார்க்கெட்டை வைத்து சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள் என நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறினார்.
நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.25 கோடிக்கு வியாபாரம் ஆகும் ஒரு படத்தில், கதாநாயகன் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக 'ஃபெப்சி' தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டினார். நடிகர்கள் சம்பளத்தை குறைத்தால், தயாரிப்பு செலவை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில், சென்னையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான விஷால், ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாக விமர்சிக்கப்படுகிறது. எந்த நடிகரும் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்பது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளத்தை முடிவு செய்து கொடுக்கிறார்கள்.
ஃபெப்சி தொழிலாளர்கள் சிலர் படப்பிடிப்பை நிறுத்தியதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்புகளை நிறுத்த தயாரிப்பாளருக்கு மட்டும்தான் உரிமை உண்டு. வேறு யாரும் படப்பிடிப்பை நிறுத்த முடியாது.
தற்போது தயாரிப்பாளர்கள் விரும்பினால் 'ஃபெப்சி'யில் இல்லாதவர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான், சினிமாத்துறை தழைக்கும்.
யார் வயிற்றிலும் அடிப்பது தயாரிப்பாளர்கள் நோக்கம் அல்ல. ஆனாலும் தயாரிப்பாளர்கள் நலன் பாதுகாக்கப்படவேண்டும். 'பெப்சி'யுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்," என்றார்.