Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக் பீயை மிஞ்சிய ரஜினி
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பி்ல் அமிதாப் பச்சனை விட ரஜினிக்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவி்ன் பாட்ஷா ரஜினி, இந்திய சினிமாவின் சக்கரவர்த்தி அமிதாப் பச்சன் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அமிதாப்பை விட அதிக செல்வாக்குடன் ரஜினி திகழ்வது தெரிய வந்துள்ளது.வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தி்ல கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி.
மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும், அமிதாப்புக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர் சோ ராமசாமி, ஸ்கிரீன் பத்திரிக்கை ஆசிரியர் பாவனா செளம்யா, அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற பிரமுகர் சஞ்சய் படோடியா ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டனர்.
விவாதத்தில் கலந்து கொண்டு சோ பேசுகையில்,ரஜினி அற்புதமான நடிகர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும நடிக்கக் கூடியவர் ரஜினி.
அவரது படங்களுக்கு உலக அளவில் சந்தை மதிப்பு உள்ளது. அவரது செல்வாக்கும் உள்ளூரைத் தாண்டி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. அதேசமயம், அமிதாப் பச்சனின் செல்வாக்கையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றார்.