Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கபாலியில் ரஜினி ரசித்த அந்த அம்பேத்கர் வசனம்!
ஒரு காலத்தில் அரசியல் வசனங்களை ரஜினி மாதிரி படங்களில் பேசியவர் யாருமில்லை.
அதில் டாப் வசனம் இது:
'என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்... இந்த அண்ணாமல பானியே தனி. நம்ம கிட்ட நியாயத்துக்கு நியாயம் பதிலுக்கு பதில்... அடிக்கு அடி ஒதைக்கு ஒதை..
மேடைக்கு மேடை காந்தி காமராஜ் அண்ணா எம்ஜிஆர் பத்தி பேசறீங்க... வருஷத்துக்கு ஒரு முறை அவங்க சிலைக்கு மாலை போடறீங்க... அந்த மாலை போட்ற ஒரு நிமிஷம் ஆகாது அவங்க சொன்ன கருத்துக்களைப் பத்தி யோசனை பண்ணிப் பாத்திருக்கீங்களா... தேர்தல் வரும்போது மட்டும் கையெடுத்து கும்பிட்டு ஓட்டுக் கேக்கறீங்க.. ஜெயிச்சிட்டா வயித்திலடிக்கிறீங்க... நாமெல்லாம் பாவம் செஞ்சிருக்கோம்யா... அதான் ஜென்மம் எடுத்திருக்கோம். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க... நமக்கு உதவி செய்யலன்னாலும் உபத்திரவம் செய்யாதீங்க.
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு.. ஆயிரம் தொழில் இருக்கு. ஆனா இந்த புனிதமான அரசியலப் பயன்படுத்தாதீங்க.'
-அண்ணாமலையில் இடம் பெற்ற இந்த வசனம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படத்திலும் இந்த மாதிரி காட்சிகள், வசனங்களை எதிர்ப்பார்க்க ஆரம்பித்தனர் ரசிகர்கள்.
உழைப்பாளியில் 'நேற்று கூலி, இன்னைக்கு நடிகன், நாளை...?'
முத்துவில் 'நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்...'
இடையில் எந்திரன் படத்தில் மட்டும்தான் அரசியல் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இப்போது கபாலியில் அவர் பேசும் ஒரு வசனம் அத்தனைப் பேருக்கும் செம ஷாக். காரணம் அது நேரடியான அரசியல் வசனம்.
பலருக்கும் எழுந்த சந்தேகம்... புரட்சிகரமான அந்த அம்பேத்கர் வசனத்தைப் பேசும்போது ரஜினிக்கு தயக்கம் இருந்ததா? எப்படி ஃபீல் செய்திருப்பார்?
பா.ரஞ்சித்திடம் கேட்டோம்...
"வெளியில் இருப்பவர்கள்தான் ஏதேதோ எழுதுறாங்க... ரஜினி சாருக்கு தெரியாம எதையாவது பண்ண முடியுமா? அந்த வசனத்தை ஷூட் பண்ணும்போது நான் தான் கொஞ்சம் தயங்கினேன். தயங்கிகிட்டே அவர்கிட்ட போய் வசனத்தை படிச்சு காமிச்சு, இதத்தான் நீங்க பேசணும் சார்.. வேணாம்னா மாத்தி தரேன்," என்றேன்.
அவர் படிச்சிட்டு, 'அட... ரொம்ப நல்லாருக்கு... எனக்கு ரொம்பப் புடிச்சுருக்கு.. இதையே பேசறேன்... எதையும் மாத்தாதீங்க..'' என்று பாராட்டிட்டு உடனே பேசிக் காமிச்சாரு.
ரஜினி சாருக்கு வாசிக்கிற பழக்கம் உண்டு. இப்பக் கூட படத்துக்கு வர்ற எல்லா விமர்சனங்களையும் ஒண்ணு விடாம அவரோட பார்வைக்கு போய்டுது. மிஸ் பண்ணவே மாட்டார்,'' என்றார் ரஞ்சித்.
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!