TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
பெங்களூரில் ரஜினி.. அதிகாலை 6 மணிக்கே பார்க்க குவிந்த மக்களுக்கு பறக்கும் முத்தம் தந்தார்!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி.
தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார்.
பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின் வீடு. இரு தினங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்றுதான் அவர் பெங்களூரில் இருக்கும் தகவல் பரவியது, உடனே அதிகாலையிலேயே அவரைச் சந்திக்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் வீட்டுக்கு முன் திரண்டனர்.

உடனே வெளியில் வந்த ரஜினி, பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவர், தலைவா தலைவா என்று வந்த கோஷத்தைப் பார்த்து ஒரு பறக்கம் முத்தம் அனுப்ப, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
பின்னர் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக, பத்திரமாகச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
கீழே இறங்கி வாசலுக்கு வந்த ரஜினியிடம் மீடியாக்காரர்கள் பேட்டி கேட்க, 'அதெல்லாம் வேண்டாமே. ச்சும்மா மக்களப் பார்க்க வந்தேன். பேட்டி வேண்டாம்,' என்றார். ரஜினியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் உடனிருந்தனர்.