Don't Miss!
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலேசியாவிலேயே தீபாவளி கொண்டாடிய ரஜினி!
கபாலி படப்பிடிப்பு மலேசியப் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு. நடுவில் தீபாவளி. இந்த தீபாவளிக்கு நிச்சயம் சென்னை வந்துவிடுவார் ரஜினிகாந்த் என்று சொல்லப்பட்டது.
சிலர், ரஜினி வந்தே விட்டார் என்று சத்தியம் அடித்தனர். ஆனால் ரஜினி மலேசியாவின் கேரே தீவிலுள்ள அம்வர்டன் கோவ் ஹோட்டலில் தங்கி அமைதியாக தீபாவளியைக் கழித்தார்.
தீபாவளி நாளன்று, மாலிக் கார்ப்பொரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் அப்துல் மாலிக் தஸ்திகீர் தலைமையில் 35 பேர் சேர்ந்து ரஜினியுடன் தீபாவளி கொண்டாடினர்.
காலை 8.30 மணிக்கு நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் கபாலி ஷூட்டிங்குக்காகவும், தனது ரசிகர்கள் நலனுக்காகவும் சிறப்புப் பிரார்த்தனை செய்தாராம் ரஜினிகாந்த்.
கேரே தீவில் இன்று படப்பிடிப்பு நிறைவடைகிறது. மீண்டும் கோலாலம்பூர் திரும்புகிது கபாலி குழு.