Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நண்பருக்காக பெங்களூர் மாநகராட்சிக்கு பிரச்சாரம் செய்வாரா ரஜினிகாந்த்?
கார்டன் சிட்டி எனப்படும் பெங்களூர் குப்பை நகரமாக உள்ளது. இந்நிலையில் குப்பையை உலர்ந்த மற்றும் ஈரப்பதம் உள்ள குப்பைகள் என இரண்டாக பிரித்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்குமாறு பெங்களூர் மாநகராட்சி அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியான ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி)வின் பிராண்ட் அம்பாசிடராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்க திட்டமிட்டுள்ளனர். அவர் குப்பையை இரண்டு வகையாக பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.
பிபிஎம்பியின் புதிய மேயரான பிஎஸ் சத்யநாராயணா ரஜினியின் பள்ளித் தோழர் ஆவார்.
அவர் இது குறித்து கூறுகையில்,
நான் மாகராட்சி ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து சென்னைக்கு சென்று ரஜினியை அழைக்கவிருக்கிறேன். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம். அவர் கேஆர் மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார் என்றார்.
ரஜினி வந்து கூறினால் கேஆர் மார்க்கெட் வியாபாரிகளிடம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று பெங்களூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் குணசேகர் (எ) குணா தெரிவித்தார்.