twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நண்பருக்காக பெங்களூர் மாநகராட்சிக்கு பிரச்சாரம் செய்வாரா ரஜினிகாந்த்?

    By Siva
    |

    Rajinikanth to be roped in for BBMP campaign?
    பெங்களூர்: ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி) ரஜினிகாந்தை தனது பிராண்ட் அம்பாசிடராக்க திட்டமிட்டுள்ளது.

    கார்டன் சிட்டி எனப்படும் பெங்களூர் குப்பை நகரமாக உள்ளது. இந்நிலையில் குப்பையை உலர்ந்த மற்றும் ஈரப்பதம் உள்ள குப்பைகள் என இரண்டாக பிரித்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்குமாறு பெங்களூர் மாநகராட்சி அண்மையில் அறிவித்தது.

    இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியான ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி)வின் பிராண்ட் அம்பாசிடராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்க திட்டமிட்டுள்ளனர். அவர் குப்பையை இரண்டு வகையாக பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

    பிபிஎம்பியின் புதிய மேயரான பிஎஸ் சத்யநாராயணா ரஜினியின் பள்ளித் தோழர் ஆவார்.

    அவர் இது குறித்து கூறுகையில்,

    நான் மாகராட்சி ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து சென்னைக்கு சென்று ரஜினியை அழைக்கவிருக்கிறேன். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம். அவர் கேஆர் மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார் என்றார்.

    ரஜினி வந்து கூறினால் கேஆர் மார்க்கெட் வியாபாரிகளிடம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று பெங்களூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் குணசேகர் (எ) குணா தெரிவித்தார்.

    English summary
    BBMP is planning to make super star Rajinikanth as its brand ambassador to create awareness among Bangaloreans on the importance of segregation of waste at source.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X