என் அபிமான தலைவரை இழந்த நாள் கறுப்பு தினம்!- நடிகர் ரஜினிகாந்த்
என் அபிமான தலைவரை இழந்த நாள் எனக்கு கறுப்பு தினமாகும். சிங்கப்பூர் மக்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ நேற்று மரணமடைந்தார்.
ரஜினிகாந்துக்கு மிகப் பிடித்த தலைவர் லீ க்வான் யூதான்.

அவரைப் பற்றி தனது பல பேட்டிகளில் உயர்வாகப் பேசியுள்ளார் ரஜினி. மக்கள் மீது அக்கறை கொண்ட அவரைப் போன்ற சிறந்த தலைவர் இங்கு உருவானால், அவருடன் இணைந்து அரசியல் செய்வேன் என்று ரஜினி கூறியிருந்தார்.
நேற்று லீ க்வான் யூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினி.
அதில், "என் அபிதான தலைவராகிய லீ க்வான் யூ மறைந்த இந்த நாள் உண்மையாகவே கறுப்பு தினம். சிங்கப்பூர் மக்களுக்கு என் அனுதாபங்கள். புதிய பாதை அமைத்துக் கொடுத்த அவரது மறைவு உண்மையான இழப்பு," என்று ரஜினி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











