Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பொங்கலுக்கு பீமா!
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த படம் பீமா. மஜாவை முடித்த கையோடு இந்தப் படத்துக்கு வந்தார் விக்ரம். இடை இடையே பல்வேறு பிரச்சினைகள் குறுக்கிட படம் படு மெதுவாக வளர்ந்து வந்தது.
படம் முடிந்த பிறகும் கூட ரிலீஸாக முடியாமல் பணப் பிரச்சினை குறுக்கிட்டதால் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிைலயில் படம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து ரிலீஸுக்குத் தயாராகி விட்டது பீமா. சென்சார் தொடர்பான நடைமுறைகள் முடிந்து, எந்தவித வெட்டும் இல்லாமல் தணிக்கை சான்றிதழை வாங்கி விட்டனர்.
பொங்கலுக்கு படம் திரைக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் விக்ரம் படம் இது. திரிஷாவும், இந்தப் படத்தை ரொம்பவே நம்பியுள்ளார். விக்ரமுடன், சாமிக்குப் பிறகு நடித்திருக்கும் திரிஷா, இதில் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்துக் கலக்கியுள்ளார்.
படம் குறித்து ஏ.எம்.ரத்னம் கூறுகையில், ஒரு கட்டத்தில் நிதிப் பிரச்சினைகளை சரி செய்து மீள முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் எப்படியோ சரி செய்து, கடன்களை அடைத்து விட்ேடன். இப்போது படம் ரிலீஸாக தயாராகி விட்டது என்றார் அவர்.
இந்தப் படத்தின் வெற்றி, நீண்ட காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணித் தயாரிப்பாளராக விளங்கிய ஏ.எம்.ரத்னத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் என்பதால் பீமாவை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.