ஏஎம் ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி - ரேணிகுண்டா பன்னீர்செல்வம் இணையும் புதிய படம்!
ரேணிகுண்டா, 18 வயசு மற்றும் நான்தான் சிவா படங்களின் இயக்குநர் பன்னீர் செல்வம் அடுத்து விஜய் சேதுபதியுடன் இணைகிறார்.

வித்தியாசமான களப் பின்னணியில் உருவாகும் இந்த அதிரடிப் படத்தை ஏஎம் ரத்னம் வழங்க ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ் ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.
முன்னணி நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
டி இமான் இசையமைக்கிறார். ஹீரோயின், வில்லன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











