Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக உதவியவர் சல்மான்கான்தானாம்!
சென்னை: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலைக்கு உதவியவர் சல்மான்கான் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
2011-ல் கைதான இந்த 5 மீனவர்களும் போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.
தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.
தமிழக அரசு
முன்னதாக 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.
ராஜபக்சே
மேலும் இலங்கையில் ராஜபக்சே மந்திரி சபையில் உள்ள தமிழ் அமைச்சர்களும் ராஜபக்சேவை சந்தித்து 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு ராஜபக்சே சம்மதித்தார்.
சல்மான்கான் உதவி?
இந்த நிலையில் 5 மீனவர்கள் விடுதலைக்கு நடிகர் சல்மான்கானும் மறைமுகமாக உதவிய தகவல் வெளியாகியுள்ளது.
அழைப்பிதழ் கொடுத்த போது...
சமீபத்தில் சல்மான்கானின் தங்கை திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இதற்கான திருமண அழைப்பிதழை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கொழும்பில் உள்ள தனது நண்பரும் பத்திரிகையாளருமான ரஜத் சர்மா மூலம் கொடுத்து அனுப்பினார்.
சல்மான் சார்பில் கோரிக்கை
ரஜத் சர்மா ராஜபக்சேவை நேரில் சந்தித்து சல்மான்கான் தங்கை திருமண அழைப்பிதழை கொடுத்தார். அப்போது ரஜத் சர்மா பத்திரிகையாளர் என்ற முறையில் 5 தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனை பிரச்சினையை எடுத்துக்கூறி அவர்களை விடுதலை செய்ய கேட்டுக்கொண்டாராம். மேலும் இது சல்மான்கானின் கோரிக்கை என்றும் எடுத்துச் சொன்னாராம்.
இப்படி பல வழிகளில் இருந்தும், நட்பு ரீதியாகவும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வந்ததாலேயே மீனவர் விடுதலை சாத்தியமாகியுள்ளது.
ரஜத் சர்மா
சல்மான்கான் பல ஆண்டுகளாகவே ராஜபக்சேயுடன் நெருக்கமாக உள்ளவர். அதேபோல பத்திரிகையாளர் ரஜத் சர்மா நடிகர் சல்மான்கானுக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ராஜபக்சேக்கு நண்பர். பாராளுமன்ற தேர்தலின் போது மோடியை அவர் டி.வி.க்காக சந்தித்து பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமல் ராஜபக்சே
சல்மான்கான் அழைப்பை ஏற்று அவரது தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொள்ள ராஜபக்சே தனது மகன் நமல் ராஜபக்சேவை அனுப்பி வைத்தார். அவர் மணமக்களை வாழ்த்தி எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சல்மான்கான் தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொண்டது மிகவும் விருப்பமான நிகழ்வாக அமைந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!