Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கதகளி ராஜ்!
தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கெட்டப்பில் வம்புச்சண்ட படத்தில் கலக்கியுள்ளார் சத்யராஜ்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கெட்டப் போடுவது என்பது சாதாரணமான ஒன்று. அந்தக் காலத்தில் சிவாஜி கெட்டப் மன்னனாக திகழ்ந்தார். பின்னர் அந்த இடத்துக்கு கமல் வந்தார். இப்போது விக்ரம், சூர்யா, அஜீத் என பலரும் கெட்டப் சேஞ்ச் செய்து அசத்துகிறார்கள்.இந்த வரிசையில் சத்யராஜும் இப்போது இணைந்துள்ளார். நிஜ சத்யராஜுக்கும், சினிமாவில் வரும் சத்யராஜுக்கும் நிறைய வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
சத்யராஜ் சாதாரணாக நடிப்பதே ஒரு கெட்டப் சேஞ்ச்தான். காரணம் அவரது 90 சதவீத படங்களில் விக் வைத்துத்தான் நடித்துள்ளார். அந்த வகையில் அதிக படங்களில் விக் வைத்து நடித்த ஒரே நடிகர் அவர்தான்.
மகா நடிகன் படத்தில் எம்.ஜி.ஆர்., இயேசு நாதர், ஹிட்லர் என விதம் விதமான கெட்டப்களில் வந்து கலக்கினார். இப்போது வம்புச்சண்ட படத்தில் இன்னும் படு வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வருகிறாராம் சத்யராஜ்.
ராஜ்கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கேரளாவின் பாரம்பரியக் கலையான கதகளி நடனக் கலைஞர் வேடத்தில் ஒரு காட்சியில் வருகிறார் சத்யராஜ். இந்த வேடத்தில் தமிழில் ஒரு நடிகர் வருவது இதுவே முதல் முறையாகும்.
இந்த வேடத்தைப் போடுவதற்காக பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் என்ற ஊரிலிருந்து நான்கு கதகளி மேக்கப் கலைஞர்களை ஷூட்டிங் நடந்த ஹைதராபாத்துக்கு வரவழைத்து மேக்கப் போட்டுள்ளனர்.
இந்த மேக்கப்பை படுக்க வைத்துத்தான் போட முடியும். இதற்காக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் படுத்தபடி கிடந்தாராம் சத்யராஜ். அதிகாலையில் ஆரம்பித்து 9 மணிக்குத்தான் மேக்கப் போட்டு முடித்தார்களாம்.
கதகளி கெட்டப்பில் நடனம் ஆடுவதோடு, ஒரு சண்டைக் காட்சியிலும் அதே கெட்டப்பில் கலக்கியுள்ளாராம் சத்யராஜ். இந்தக் காட்சி படத்துக்கு பலம் சேர்க்கும் என்பதால் சிரமப்பட்டு மேக்கப் போட்டுக் கொண்டாராம் சத்யராஜ். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இதுபோல மேக்கப் போட்டு அந்தக் காட்சியை படமாக்கினார்களாம்.
இதுபோலவே பெரியார் படத்துக்காக, பெரியார் மேக்கப் போட்டபோதும் சிரமப்பட்டுத்தான் நடித்தார் சத்யராஜ். அதாவது பெரியார் குள்ளமானவர். ஆனால் சத்யராஜ் உயரம்தான் உலகம் அறிந்ததே. இதனால் பெரியார் வேடத்தில் நடித்தபோது முதுகை குறுக்கிக் கொண்டு சிரமப்பட்டு நடித்தாராம் சத்யராஜ்.
கல்யாணமாகிப் போகப் போகும் தியா நடித்துள்ள கடைசிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?