Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எதிர்பார்த்த வெற்றியை தராத தங்கமகன்...செல்வராகவனைக் காக்க வைக்கும் தனுஷ்
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த புதிய படம், ஒருசில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தனுஷ் தற்போது துரை செந்தில்குமாரின் கொடி படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை மற்றும் ஹிந்தியில் ஒரு புதிய படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக 2016 ம் ஆண்டு தொடக்கத்தில் செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போதைய நிலவரப்படி முதலில் துரை செந்தில்குமாரின் கொடி படத்தை முடித்து விட்டே செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிக்கிறாராம்.
தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கமகன் திரைப்படம் சரியாகப் போகவில்லை என்பதால், தான் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்களில் தனுஷ் மிகவும் அக்கறை காட்டுவதாகவும் அதுவே இந்த தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களுக்குப் பிறகு தனுஷ்- செல்வராகவன் இந்தப் படத்தின் மூலம் 4 வது முறையாக இணைகின்றனர்.
மேலும் மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து தனுஷ்- செல்வராகவன் கூட்டணி மீண்டும் இணைவதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதற்கிடையில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் செல்வராகவன் வசனம் எழுதிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் வருகின்ற புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.
செல்வராகவன் -சிம்பு கூட்டணியில் உருவாகி வந்த கான் படத்தை தனுஷ் படத்திற்காகத் தான் செல்வராகவன் நிறுத்தி வைத்தார் என்று முன்னர் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.