twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நியூயார்க் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார் ஷாரூக்கான்!

    By Mathi
    |

    shahrukh khan
    நியூயார்க்: இந்தி நடிகர் ஷாரூக்கானை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் 2 மணிநேரம் நியூயார்க் விமானநிலையத்தில் தடுத்து வைத்தனர்.

    இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள், அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். யேல் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக ஷாரூக்கானும் அவருடன் முகேஷ் அம்பானியின் மனைவி நீடாவும் நியூயார்க் சென்றிருந்தனர்.

    நியூயார்க் விமான நிலையத்தில் இறங்கிய ஷாரூக்"கான்" என்ற பெயரைக் கேட்டதும் கிலி அடைந்தார்போல் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை அப்படியே ஓரம்கட்டி உட்காரவைத்துவிட்டனர்.

    பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து ஷாரூக்கானிடம் விசாரணை நடத்திக் கொண்டே இருந்தனர். இப்படியே 2 மணிநேரம் ஓடிப்போய்விட்டது. இதன் பிறகே ஷாரூக்கான் விடுவிக்கப்பட்டார்.

    யேல் பல்கலைக் கழகமும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுதான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ப்பது தெரியவந்தது.

    இது பற்றி கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு வரும்போதெல்லாம் இதெல்லாம் சகஜம்... எப்பவுமே நடக்கிறதுதான் பாஸ் என்ற ரீதியில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இப்படி ஷாரூக்கான் சோதனையில் சிக்குவது 3-வது முறை. காரணம் கான் என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்காகாரர்களுக்கு குழப்பம் ஏற்படுவதே!. கமல்ஹாசனைக் கூட இப்படித்தான் ஒரு்முறை நிறுத்தி வைத்து சோதித்தனர் - காரணம் அவரது பெயரில் ஹாசன் என்ற பெயர் இருப்பதால்.

    English summary
    Shah Rukh Khan, who arrived New York to visit the Yale University, was detained for over two hours at a New York airport.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X