Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? - என்னை அறிந்தால் எதிர்ப்பாளர்களால் சிம்பு ஆவேசம்!
எனக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அதனால்தான் என்னை அறிந்தால் பார்த்துவிட்டு அப்படி கருத்து பதிவு செய்தேன். இதை ஏன் எதிர்க்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சிம்பு.
அஜீத் நடித்த ‘‘என்னை அறிந்தால்'' படத்தை நடிகர் சிம்பு பார்த்து விட்டு சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.
‘அதில் மெண்டல்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ட்விட்டர் பேஸ்புக்குகளில் சிம்புவை ரசிகர்கள் கண்டித்து கருத்துக்களை வெளியிட்டனர். 'எனக்கு படம் பிடிக்கவில்லை. அதற்காக நான் மெண்டலா?' என்று கேட்டும் கருத்து வெளியிட்டனர்.
இதர நடிகர்களின் ரசிகர்களும் சிம்புவை கண்டித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் இந்த பிரச்சினை மோதலையும் ஏற்படுத்தி உள்ளது. அஜீத் ரசிகர்களும் இதர நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரையொருவர் திட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு ஏற்கெனவே இரு முறை ட்விட்டரில் விளக்கம் அளித்தார் சிம்பு.
இப்போது மீண்டும் ஒரு விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. அவர் கூறுகையில், "நான் யாரையும் குறிப்பிட்டு கருத்து சொல்லவில்லை. இதற்கு முன்பு தொடர்ந்து சில நல்ல படங்கள் வந்தன. இப்போது அப்படி இல்லை. எப்போதாவதுதான் நல்ல படம் வருகிறது.
சினிமாவில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. ‘யு' சான்றிதழில் படம் இருக்க வேண்டும். காமெடி படங்களாக இருக்க வேண்டும். அவற்றைதான் பார்க்கிறார்கள். பேய் படங்களையும் பார்க்கிறார்கள். இப்படி நிறைய பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் நிறைய பணம் போட்டு படம் எடுக்கிறார்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான சூழ்நிலையும் இப்போது குறைவு.
எல்லா படங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ‘ஐ' படத்தை பிரமாண்டமாக எடுத்து இருந்தனர். அந்த படத்தை கேவலமாக பேசினால் பணம் போட்ட தயாரிப்பாளர் நிலைமை என்ன ஆகும் என்று சிந்திக்க வேண்டும்.
‘அஞ்சான்' படம் சரியாக போகாததால் டைரக்டர் லிங்குசாமியை கிண்டல் செய்தார்கள். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அது அவர்களின் கருத்து சுதந்திரம் என்று இருந்தேன்.
அதுபோல் எனக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. ‘‘என்னை அறிந்தால்'' படம் பற்றி என் கருத்தைச் சொன்னேன். அதை ஏன் பிரச்சினையாக ஆக்குகிறார்கள் என்று புரிய வில்லை," என்றார்.