'கொன்னே புடுவேன்...' அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் சிம்பு!
சிம்பு படம்தான் நாலு வருஷத்துக்கு ஒன்று ரிலீஸ் ஆகும். ஆனால் அவரை வைத்து சர்ச்சைகள் மாதத்துக்கு ஒன்று ரிலீஸாகிக்கொண்டேதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மீடியாக்களுக்கு தீனி போட்ட்தில் சிம்புவுக்கு தனி இடம் உண்டு. சென்ற ஆண்டு வரலாறு காணாத துயரமான தமிழ்நாட்டு வெள்ளத்தையே தனது கேவலமான பீப் ஸாங்கால் திசை திருப்பியவர் சிம்பு.
சில நாட்களாக கால்ஷீட் சொதப்பல் மட்டுமே சிம்பு பற்றிய செய்திகளாக வந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் அவரும் த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி பாடியிருக்கிறாராம் சிம்பு. அந்த பாடல் நிச்சயம் நிறைய பிரச்னைகளை உண்டு பண்ணும் என்கிறார்கள். சுவாதி உட்பட இளம்பெண்கள் கொலைகள் பெருகி வரும் சூழ்நிலையில் 'என்னை விட்டுட்டு வேற யாரையாவது கட்டிக்கிட்டா கொன்னேபுடுவேன்...' என்று வரிகள்
எழுதியிருக்கிறாராம் சிம்பு.
அப்ப கன்ஃபார்ம்...!


Click it and Unblock the Notifications











