நல்ல செய்தி வருது... சிம்பு
சென்னை: தொடர்ந்து 3 வருடங்களாக நடித்த எந்தப் படமும் ரிலிசாகாமல் கவலையில் தத்தளித்த சிம்பு விரைவில் நல்ல செய்தி வரவுள்ளதாக டிவிட் செய்துள்ளார்.
வாலு, வேட்டை மன்னன் மற்றும் இது நம்ம ஆளு போன்ற மூணு படங்களுமே வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டதால் மனிதர் சோகப் பாட்டு பாடிக் கொண்டு திரிந்தார்.

இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் கான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் லேசான நம்பிக்கை துளிர்விட தனது கெட்டப்பை சற்று மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தவர் தற்போது உற்சாக மூடுக்கு மாறி இனிமேல் எனக்கு எல்லாமே நல்ல நேரம்தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்படி என்ன நல்ல விஷயம் என்று கேட்கிறீர்களா வாலு படத்தின் டிரைலருக்கு முன்பாகவே படரிலீஸ் பற்றி முறையாக அறிவிக்கப்படும் மற்றும் இது நம்ம ஆளு படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்தி விரைவில் நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பற்றி விரைவில் முறைப்படி கூறுகிறேன் என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
நல்லது நடந்தா சரிதான்!


Click it and Unblock the Notifications











